வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் – தீவிர சோதனை 

24482 0

அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள வேலி அருகே சந்தேகப்படும் வகையில் மர்மப்பை கிடந்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளை மாளிகையை தற்காலிகமாக மூடி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற வேளையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment